இந்திய செய்திகள் · August 27, 2026

லஞ்சப் பணத்தை பிரித்துக்கொள்ள உறுதிமொழி எடுத்த கவுன்சிலர்கள்

லஞ்சப் பணத்தை பிரித்துக்கொள்ள உறுதிமொழி எடுத்த கவுன்சிலர்கள்

லஞ்சப் பணத்தை பிரித்துக்கொள்ள உறுதிமொழி எடுத்த கவுன்சிலர்கள்

இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜ​கான்​பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் கங்கை நீரின் மீது சத்​தி​யம் செய்​து, லஞ்​ச​மாக கிடைக்​கும் பணத்தை தங்​களுக்​குள் நேர்மையாக பகிர்ந்து கொள்​வது தொடர்​பாக உறுதி மொழி எடுத்த ஒரு வீடியோ சமூக ஊடகங்​களில் வைரலாகி உள்ளது.

வெளியான காணொளியில் , ஒரு​வர் வாட்​டர் பாட்​டிலில் உள்ள கங்கை நீரை அங்​குள்ள மற்ற நபர்​களின் கைகளில் ஊற்​றுகிறார்.கங்கை நீரின் மீது சத்​தி​யம்

லஞ்சப் பணத்தை பிரித்துக்கொள்ள உறுதிமொழி எடுத்த கவுன்சிலர்கள்

அதன் பிறகு அவர் “மாநக​ராட்​சிக்கு கிடைக்​கும் பணம் 60 கவுன்​சிலர்​களுக்​கும் சமமாகப் பகிரப்​படும். குழு​வில் உள்ள யாருக்​காவது பிரச்​சினை ஏற்​பட்​டால், அனை​வரும் ஒற்​றுமை​யாக அவருக்கு ஆதர​வாக நிற்போம்” என சத்​தி​யம் செய்​கிறார்.

அதைத் தொடர்ந்து மற்ற அனை​வரும் அதே வாக்​கி​யங்​களை மீண்​டும் கூறி சத்​தி​யம் செய்​கின்​றனர். மேலும், அந்த வீடியோவில் சத்​தி​யத்தை மீறிய ஒரு​வரை துரோகி என்று குறிப்பிடுவதும் இடம்​பெற்​றுள்​ளது.

இந்த வீடியோ கவுன்​சிலர்​கள் மீது ஊழல் குற்​றச்​சாட்​டு​களை கிளப்​பி​யுள்​ளது. இது தொடர்​பாக மாநக​ராட்சி ஆணை​யர் சவும்யா குரு​ராணி , “இந்த வீடியோ 2025 நவம்​பரில், முந்​தைய மாநக​ராட்சி ஆணை​யர் பதவி​யில் இருந்த காலத்​தில் பதிவு செய்யப்​பட்​ட​தாகவும், எனினும் அது குறித்து விசாரணை தொடங்க்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளன.

Related News